follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்க சதொச தீர்மானம்

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்க சதொச தீர்மானம்

Published on

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வெளியிட சதொச தீர்மானித்துள்ளது.

உள்ளூர் முட்டையின் விலையேற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், சதொச கிளைகளுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று அவற்றை வாங்குகின்றனர்.

சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை வெளியிடுவதுடன், அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒரு முட்டைக்காக 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முட்டை கடை உரிமையாளர்கள் உள்ளூர் சிவப்பு முட்டை 60 ரூபாய்க்கும், வெள்ளை முட்டை 58 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...