மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்க சதொச தீர்மானம்

434

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வெளியிட சதொச தீர்மானித்துள்ளது.

உள்ளூர் முட்டையின் விலையேற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், சதொச கிளைகளுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று அவற்றை வாங்குகின்றனர்.

சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை வெளியிடுவதுடன், அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒரு முட்டைக்காக 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முட்டை கடை உரிமையாளர்கள் உள்ளூர் சிவப்பு முட்டை 60 ரூபாய்க்கும், வெள்ளை முட்டை 58 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here