மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அங்கவீனமுற்றோர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.