follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'யுக்திய' பொலிஸ் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Published on

நாளை (24), நாளை மறுதினம் (25) மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய “யுக்திய” பொலிஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

நிஹால் தல்துவாவின் கருத்துப்படி, நத்தார் (25) மற்றும் 26 ஆம் திகதி போயா தினத்தை முன்னிட்டு “யுக்திய” நடவடிக்கை நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, “யுக்திய” நடவடிக்கை மீண்டும் தொடங்கவுள்ளது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ;

“நாம் முழுவதும் கடந்த 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை முதல் வாரத்தில் அதாவது 7 நாட்கள் வரை யுக்திய எனும் பொலிஸ் நடவடிக்கையை அமுல்படுத்தினோம். இதை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. 25ம் திகதி கிறிஸ்மஸ் குறிப்பாக 24, 25, 26… எங்களிடம் உள்ளது. அதிகாரிகளை சில பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். சில நாட்களுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்தினாலும், எதிர்காலத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...