follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'யுக்திய' பொலிஸ் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Published on

நாளை (24), நாளை மறுதினம் (25) மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய “யுக்திய” பொலிஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

நிஹால் தல்துவாவின் கருத்துப்படி, நத்தார் (25) மற்றும் 26 ஆம் திகதி போயா தினத்தை முன்னிட்டு “யுக்திய” நடவடிக்கை நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, “யுக்திய” நடவடிக்கை மீண்டும் தொடங்கவுள்ளது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ;

“நாம் முழுவதும் கடந்த 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை முதல் வாரத்தில் அதாவது 7 நாட்கள் வரை யுக்திய எனும் பொலிஸ் நடவடிக்கையை அமுல்படுத்தினோம். இதை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. 25ம் திகதி கிறிஸ்மஸ் குறிப்பாக 24, 25, 26… எங்களிடம் உள்ளது. அதிகாரிகளை சில பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். சில நாட்களுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்தினாலும், எதிர்காலத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...