காஸாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் முகாம்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இந்தப் பின்னணியில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களுக்கான புதிய போர்நிறுத்தப் பிரேரணையை எகிப்து சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.