follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி திட்டம் ஜனவரி 6ம் திகதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும்.

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இலங்கையை தட்டம்மை நோயை ஒழித்த நாடாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...