follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இருபது - 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இருபது – 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Published on

ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

20-20 போட்டிகளுக்கான இருபத்தி இரண்டு பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

20-20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை 20-20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பானுக ராஜபக்ஷ, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் 20-20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 20-20 தொடருக்கான இலங்கை அணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்க
சரித அசலங்க
பெதும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
தசுன் ஷானக
ஏஞ்சலோ மேத்யூஸ்
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
நுவன் துஷார
குசல் ஜனித்
பானுக ராஜபக்ஷ
கமிந்து மெண்டிஸ்
மதீஷ பத்திரன
துனித் வெள்ளாலகே
அகில தனஞ்சய
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
தில்ஷான் மதுஷங்க மற்றும்
துஷ்மந்த சமிர

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...