follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இன்று முதல் உணவக உணவுகளின் விலை அதிகரிப்பு

இன்று முதல் உணவக உணவுகளின் விலை அதிகரிப்பு

Published on

சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் (சோர்ட் ஈட்ஸ்) 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்திருந்தார்.

மேலும், சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் என்பன 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், கோட் சூட் அணிந்த கொத்து பாஸ் ஒருவர் ஊடகங்கள் முன்னிலையில், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ஒரு ரூபாய் ஏனும் உணவு விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும், அத்தகைய உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுமாறும் நுகர்வோரிடம் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...