follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை

மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Published on

மாலபே – கஹன்தொட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாலம்பே கஹந்தோட்ட பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 35 வயதுடைய நபர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண்களும் ஒரு ஆண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுவர்கள் 09, 08 மற்றும் 07 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் நேற்று (30) இடம்பெற்றன.

மனவேதனையின் காரணமாக நேற்றிரவு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்.

மூன்று பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதுடன் தாய் மாலம்பே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை...

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...