மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை

1077

மாலபே – கஹன்தொட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாலம்பே கஹந்தோட்ட பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 35 வயதுடைய நபர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண்களும் ஒரு ஆண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுவர்கள் 09, 08 மற்றும் 07 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் நேற்று (30) இடம்பெற்றன.

மனவேதனையின் காரணமாக நேற்றிரவு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்.

மூன்று பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதுடன் தாய் மாலம்பே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here