கலால் வரியை உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு

397

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் விஷேட மதுபானத்திற்கும் 6,000 ரூபா வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் வெளிநாட்டு மதுபானத்தின் மீதும் 6,600 ரூபாவாக இருந்த வரி 7,320 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

வற் வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன், சிகரெட்டின் விலையும் இன்று முதல் 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here