ஜப்பானிய நிலநடுக்கத்தில் இதுவரைக்கும் 8 பேர் பலி

478

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் பல கடலோரப் பகுதிகளில் சிறிய சுனாமி ஏற்பட்டது மற்றும் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிறுத்தப்பட்ட ஜப்பானிய அதிவேக ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here