follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரல் தொடர்பிலான அறிவித்தல்

அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரல் தொடர்பிலான அறிவித்தல்

Published on

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

“.. நாம் அஸ்வெசும திட்டத்தினை விரிவுபடுத்த நாங்கள் உழைத்தோம். இதுவரை எங்களால் 1,410,000 ரூபாய்க்கு பணம் செலுத்த முடிந்துள்ளது. நாங்கள் அதிக பணவீக்கத்தைக் கொண்டிருந்த மாதத்துடன் ஒப்பிடும்போது அந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்காலத்தில், எஞ்சியுள்ள வெற்றிடங்களைத் தவிர்த்து, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் மீளவும் அஸ்வெசும விண்ணப்பங்களை கோர எண்ணியுள்ளோம்.. அப்போது ஒருபுறம் பொருளாதாரம் மீண்டு வரும்.

மேலும், சீர்திருத்த செயல்பாட்டின் போது பாதிக்கப்படும் மக்கள் குழு உள்ளது. குறுகிய காலத்தில். அவர்களைக் கவனிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதேவேளை, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவை கட்டணங்களை செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான கட்டணங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதிக்குள் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...