மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் என பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு எதிர்காலத்தில் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் X தள பதிவில் தெரிவித்துள்ளார்.
சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை மீறும் வகையில் செயற்படும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.