follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பல் செங்கடலுக்கு

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பல் செங்கடலுக்கு

Published on

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற “ஷில்பா அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க,

“.. உக்ரைனில் போர், காஸாவில் அடுத்தபடியாக போர், ஆதலால் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கலாம். தற்போது செங்கடலில் உள்ள கப்பல்களுக்கு ஹூதி குழு ஏவுகணைகளை அனுப்புவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் செங்கடல் ஊடாக பயணிக்காது தென்னாபிரிக்கா ஊடாக பயணித்து வருமானால் பொருட்களின் விலை அதிகரிக்கும். அதனால் ஹவுதி திட்டத்திற்கு எதிராக நாமும் உடன்பட்டுள்ளோம். அவர்களை பாதுகாக்க இலங்கை கடற்படையில் இருந்து செங்கடலுக்கு கப்பல் ஒன்றினை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.. அப்படி ஒரு கப்பல் அனுப்பப்படும் போது , இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு 250 மில்லியன் ரூபாய் செலவாகும். நாங்கள் கடினமான இடத்தில் இருக்கிறோம். அதைப் பாதுகாக்க வேண்டும்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...