ரணிலுக்கு முன் வஜிர வடக்கிற்கு

201

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வடமாகாண அரசியல் அதிகார சபைகளுக்கு அறிவித்தார்.

வடமாகாண ஆளுநர்கள், செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகார சபைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் வஜிர அபேவர்தன பூர்வாங்க விளக்கமளித்தார்.

வடமாகாண பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய்ந்து துரிதமான தீர்வுகளை வழங்குவார் என வஜிர அபேவர்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here