இந்தியாவிலிருந்து 20 இலவச இன்ஜின்கள்

432

இலங்கைக்கு 20 இன்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது.

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் என்ஜின்களை நாட்டின் புகையிரத அமைப்பின் செயற்பாட்டுடன் நாட்டுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்.

அவற்றை இந்நாட்டில் இயக்க முடியுமா என சமீபத்தில் இந்தியா வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு இன்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here