follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

Published on

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம், மத்திய வங்கி மற்றும் காலி கேட் வளாகங்களுக்குள் நுழைவதைத் தடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சித்தம்பலம் ஏ.கார்டினர் மாவத்தைக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்யும் சுற்றறிக்கை செல்லாது எனவும், மின்சார சபை ஊழியர்கள் தமது கட்டளைக்காகவே செயற்படுவதாகவும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார வாரியத்தை இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த விற்பனை செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நேற்று(04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார வாரியத்தை சீரமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் ஊழியர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் அத்தியாவசிய சேவை என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...