தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சில் மற்றுமொரு அதிகாரி இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரகாரம் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.