இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 92 வருட சாதனையை முறியடித்துள்ளன

942

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் கடந்த 03ம் திகதி நிறைவடைந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் உலகின் மிகக் குறைந்த பந்துகளில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 642 ஆகும். இதற்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியின் முடிவுகளை 656 பந்துகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பந்துகளில் தீர்மானிக்கப்பட்டது.

1932 ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் மூலம் 92 வருட சாதனை நேற்றுமுன்தினம் முறியடிக்கப்பட்டது.

அந்த சாதனையை முறியடித்த நேற்றைய போட்டி, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் பங்கேற்ற கடைசி டெஸ்ட் போட்டியும் கூட.

அந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா 23.2 ஓவர்களையும் (முதல் இன்னிங்ஸ்) இரண்டாவது இன்னிங்ஸிற்காக 36.5 ஓவர்களையும் செலவிட்டிருந்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸுக்கு 34.5 ஓவர்களையும், இரண்டாவது இன்னிங்ஸுக்கு பன்னிரண்டு ஓவர்களையும் எதிர்கொண்டது.

அந்த வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here