Zoom தொழில்நுட்பத்துடன் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள்

164

மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால், காலி சிறைச்சாலையில் இன்று(08) முதல் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய கைதிகள் அனைவரும் தற்போது அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து, சிறைச்சாலையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த அறிகுறிகளை வெளிப்படுத்திய மேலும் 08 கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here