மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு மற்றும் முதல் பெண்மணி சஜீதா மொஹமட் ஆகியோர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.
டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மொஹமட் முயிசு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விமானம் புஜியான் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மாலத்தீவு ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் சிறப்பு அழைப்பின் பேரில் மாலத்தீவு ஜனாதிபதி சீனா விஜயமாகியுள்ளார்.