follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1JVP முத்துக்களால் குவிகின்றது.. SJB இற்கு கலி பவுசர்களே சேருகிறார்கள்..

JVP முத்துக்களால் குவிகின்றது.. SJB இற்கு கலி பவுசர்களே சேருகிறார்கள்..

Published on

தேசிய மக்கள் சக்தியின் ஆயிரக்கணக்கான முத்துக்கள் சேர்ந்து வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் கலி பவுசர்களில் (மலசல கழிவுகளை அகற்றக்கூடிய பவுசர்) குப்பை கழிவுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வரி விதித்து மக்களை கொன்று குவிக்கும் ஆட்சியாளர்கள் தேர்தல் நெருங்கும் போது மின் கட்டணத்தை குறைக்க தயாராகி வருகின்றனர் என்றார்.

அதன்பிறகு தகரம், உணவு, மதுபானங்கள் என வழங்கி மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த கதை எல்லாம் கடந்த காலத்தைச் சேர்ந்தது எனவும் எதிர்காலத்திற்குரியதாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்...