follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1உதவித்தொகையாக ரூ.35,000 வழங்கக் கோரி 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தம்

உதவித்தொகையாக ரூ.35,000 வழங்கக் கோரி 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தம்

Published on

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (10) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி தீர்மானித்துள்ளது.

10 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனம் போன்றவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை 35,000 ரூபாயால் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வைத்திய ஊழியர்கள் நேற்று அரசு வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...