follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"நடுக்கடலில் விஸ்கி விருந்து வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல்"

“நடுக்கடலில் விஸ்கி விருந்து வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல்” [VIDEO]

Published on

நாடு திவாலாகி குழந்தைகள் பட்டினியால் வாடும் வேளையில் அரசாங்க எம்.பிக்கள் குழுவொன்று நடுக்கடலில் விஸ்கி விருந்து வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விருந்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாணவர்களுக்கு பருவச் சீட்டு வழங்க முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களை நடுக்கடலில் வைத்து விருந்து வைக்க அரசாங்கம் அனுமதிப்பது அநியாயம் எனவும் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:

“.. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா, தியகோவுலா போன்ற கப்பல்களை பயன்படுத்தி நடுக்கடலில் விருந்து வைத்துள்ளனர். இது பொய்யல்ல. மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்து செய்யப்பட்டன. அவர்கள் விருந்துகளை நடத்துகிறார்கள். நாட்டுக்குச் சொந்தமான படகுகளைப் பயன்படுத்தி எப்படி நடுக்கடலில் விருந்து வைக்க முடியும்? திவாலான நாட்டில் விஸ்கி கொண்டு வந்து போர்ட் ரெஸ்டாரண்டில் சாப்பாடு போட்டு பார்ட்டி போடுகிறார்கள், திவாலான நாட்டில் இப்படி பார்ட்டி போடுகிறீர்களா? தனிப்பட்ட பணத்தை வைத்து என்ன செய்தாலும் பரவாயில்லை. மணல் அள்ளும் இயந்திரங்களின் மேல் இந்த விருந்து வைக்கப்பட்டுள்ளது. இவர்களை வரவேற்க சிவப்பு கம்பளம் போடப்பட்டது. இது ஒரு மிருகத்தனமான செயல்.

நான் நாட்டுக்கு முக்கியமான ஒன்றைப் பற்றி பேசுகிறேன். என் வாயை மூடாதே இந்த நாட்டில் சிறு குழந்தை முதல் தாய்மார்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி எப்படி இரண்டு கப்பல்களை எடுத்து நடுக்கடலில் விருந்து வைக்க முடியும்..”

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க:

புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக உங்கள் தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி உங்கள் சகோதரி பணத்தை திருடும்போது காப்பாற்றினார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச:

புலிகளுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று வேறு யாரிடமும் கேட்காதீர்கள். அதைப் பற்றி டிரான் அலசிடம் கேளுங்கள்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...