follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1UPFA செயலாளர் கதிரையை நிரந்தரமாக நிரப்ப மைத்திரி களத்தில்

UPFA செயலாளர் கதிரையை நிரந்தரமாக நிரப்ப மைத்திரி களத்தில்

Published on

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (UPFA) நிரந்தர செயலாளர் நாயகத்தை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் செயலாளர்களான மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடிய விரைவில் செயலாளரை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

மைத்திரியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவை அப்பதவியில் இருந்து நீக்கி திலங்க சுமதிபால அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மஹிந்த அமரவீர, நீதிமன்றத்திற்குச் சென்றபோது அங்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இருவரும் செயலாளர்களாக ஏற்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக மைத்திரிக்கு நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத காரணத்தினால் நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இருவரிடமும் கலந்துரையாடி ஒருவரை முன்னிறுத்துமாறும் அல்லது நீதிமன்ற நடவடிக்கையை வாபஸ் பெறுமாறும், இல்லை என்றால் மைத்திரிக்கு பொதுச் செயலாளரை நியமிக்க மத்திய குழுவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...