follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1UPFA செயலாளர் கதிரையை நிரந்தரமாக நிரப்ப மைத்திரி களத்தில்

UPFA செயலாளர் கதிரையை நிரந்தரமாக நிரப்ப மைத்திரி களத்தில்

Published on

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (UPFA) நிரந்தர செயலாளர் நாயகத்தை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் செயலாளர்களான மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடிய விரைவில் செயலாளரை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

மைத்திரியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவை அப்பதவியில் இருந்து நீக்கி திலங்க சுமதிபால அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மஹிந்த அமரவீர, நீதிமன்றத்திற்குச் சென்றபோது அங்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இருவரும் செயலாளர்களாக ஏற்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக மைத்திரிக்கு நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத காரணத்தினால் நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இருவரிடமும் கலந்துரையாடி ஒருவரை முன்னிறுத்துமாறும் அல்லது நீதிமன்ற நடவடிக்கையை வாபஸ் பெறுமாறும், இல்லை என்றால் மைத்திரிக்கு பொதுச் செயலாளரை நியமிக்க மத்திய குழுவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...