follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1நுவரெலியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் விசேட சோதனைக்கு

நுவரெலியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் விசேட சோதனைக்கு

Published on

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகள் இந்த நாட்களிலும் தொடரும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை குறைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

மாகாணம் முழுவதும் அமுல்படுத்தப்படும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு சமாந்தரமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி நுவரெலியா பொலிஸாரும் 3ம் லயன் படைப்பிரிவின் உத்தியோகத்தர்களும் நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து நுவரெலியா நகர எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் இரவு பகலாக சோதனையிட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...