ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என காலி மாநாட்டில் நிறைவேற்றம்

241

உலகை வென்று இலங்கையைக் கட்டியெழுப்பும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மருத்துவராக இருப்பதற்கும் நாட்டின் தலைவராக இருப்பதற்கும் பொருத்தமான தகுதிகள் அவசியம் என தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு காலி மாநகர சபை மண்டபத்தில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசியத் தலைவராக போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை வஜிர அபேவர்தனவினால் மாநாட்டில் முன்வைக்கப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பிரேரணையை நிறைவேற்றினர்.

மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க தலைவர், இந்த வேலைத்திட்டம் காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இருபத்தெட்டாம் திகதி இலங்கை முழுவதும் இவ்வாறான மாநாடுகளை நடாத்தி இந்தப் பயணத்திற்கு ஆதரவளிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here