follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என காலி மாநாட்டில் நிறைவேற்றம்

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என காலி மாநாட்டில் நிறைவேற்றம்

Published on

உலகை வென்று இலங்கையைக் கட்டியெழுப்பும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மருத்துவராக இருப்பதற்கும் நாட்டின் தலைவராக இருப்பதற்கும் பொருத்தமான தகுதிகள் அவசியம் என தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு காலி மாநகர சபை மண்டபத்தில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசியத் தலைவராக போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை வஜிர அபேவர்தனவினால் மாநாட்டில் முன்வைக்கப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பிரேரணையை நிறைவேற்றினர்.

மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க தலைவர், இந்த வேலைத்திட்டம் காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இருபத்தெட்டாம் திகதி இலங்கை முழுவதும் இவ்வாறான மாநாடுகளை நடாத்தி இந்தப் பயணத்திற்கு ஆதரவளிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...