மின் கட்டணத்தை 3.3 சதவீதத்தால் குறைக்க முன்மொழிவு

475

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமான மிகக் குறைந்த சதவீதத்தினால் குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபை இவ்வருடம் 71,000 கோடி ரூபா வருமானம் பெற்று 2,300 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைத்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் செயற்படுவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

0-30 மின்சார அலகுகளுக்கு இடையில், வாடிக்கையாளரின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் அவர்களின் மாதாந்த கட்டணக் கட்டணமாக 25 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here