follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1மின் கட்டணத்தை 3.3 சதவீதத்தால் குறைக்க முன்மொழிவு

மின் கட்டணத்தை 3.3 சதவீதத்தால் குறைக்க முன்மொழிவு

Published on

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமான மிகக் குறைந்த சதவீதத்தினால் குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபை இவ்வருடம் 71,000 கோடி ரூபா வருமானம் பெற்று 2,300 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைத்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் செயற்படுவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

0-30 மின்சார அலகுகளுக்கு இடையில், வாடிக்கையாளரின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் அவர்களின் மாதாந்த கட்டணக் கட்டணமாக 25 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...