தேசிய அரசாங்கம்.. பிரபலமானவருக்கு பிரதமர் பதவி.. கூட்டணிக்கு SJB தரப்பிலிருந்தும் தலைகள்

1519

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் பல பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கமைவாக, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கில் தமிழ் கட்சிகள், பெருந்தோட்ட அரசியல் கட்சிகள், பொது மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பும் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணி உருவானதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்படுவார் எனவும் அதன் பின்னர் கூட்டணியின் பலமான தலைவர் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here