ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்றிருந்த தமது மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பத்தேகம கோனாபீனுவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞன் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உடனடி கவனம் செலுத்துமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்தேகம கோனாபினுவல அலபலவத்த பிரதேசத்தை சேர்ந்த கவிந்து சத்சர என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு அங்குள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரர் வேலைக்காக சென்றுள்ளார்.
அதன்பிறகு தினமும் உறவினர்கள், நண்பர்களிடம் பேசி வந்தாலும் கடந்த 6ம் திகதி
முதல் மகன் குறித்து எந்த தகவலும் இல்லை என கவிந்துவின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்நிலையில், கவிந்துவின் பணியிடத்தில் விசாரணை நடத்தியபோது, கவிந்து ஏற்கனவே இறந்துவிட்டதாக அதன் பிரதிநிதிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் படி மகனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து அவர் இறந்துவிட்டால் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர தலையிடுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.