follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஜனாதிபதி நாளை உகண்டாவுக்கு

ஜனாதிபதி நாளை உகண்டாவுக்கு

Published on

சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக உகண்டா செல்லவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19வது அரச தலைவர் உச்சி மாநாடு மற்றும் G77 மற்றும் சீனா, மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உகண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவில் உள்ள கம்பாலாவில் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) “பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற உள்ளது.

ஜி77 மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு உச்சிமாநாடுகளிலும் உரையாற்றவுள்ளதோடு, இந்த விஜயத்தின் போது ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கை வெற்றிகரமாக வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற இந்திய தொழில் குழும கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...