பொது பாதுகாப்பு அமைச்சகம் 5 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான திறந்த ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏல ஏற்பு கடந்த 16ம் திகதியுடன் முடிவடைந்து, 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் ஏல ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு திறந்த டெண்டர் நடத்தப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.