follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1பழிவாங்குவோம் என ஈரான் தெரிவிப்பு

பழிவாங்குவோம் என ஈரான் தெரிவிப்பு

Published on

சிரியாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையின் மூத்த அதிகாரிகள் 05 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 05 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும், சிரியாவும் கூறி வந்தாலும், இஸ்ரேல் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த தாக்குதல் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல் என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...