சிரியாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையின் மூத்த அதிகாரிகள் 05 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 05 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும், சிரியாவும் கூறி வந்தாலும், இஸ்ரேல் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த தாக்குதல் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல் என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.