follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இலங்கை மற்றும் உகாண்டா ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் உகாண்டா ஜனாதிபதிகள் சந்திப்பு

Published on

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்த உகண்டா ஜனாதிபதி, சிறிது நேரம் சுமூகமாக கலந்துரையாடிய பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

தனது அழைப்பையேற்று வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி, சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியதோடு, அதற்காக நாட்டு மக்களின் பாராட்டும் கிட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் புதிய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது தலைவர்கள் கலந்துரையாடியதோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை, பொருளாதார ரீதியில் முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை 2024 ஆம் ஆண்டின் புதிய அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சரிவடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகக் கடினமானதாக அமைந்திருந்த வேளையில், அந்தப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கவேண்டும் என்பதே இலங்கையின் மத்தியஸ்த நிலைப்பாட்டைக் கொண்ட பலரின் நிலைப்பாடாக இருந்தென சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் குறுகிய கால திட்டங்களினால் இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்துள்ளதாகவும், அதனால் பலரும் அவரைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை – உகண்டாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய துறைகள் ஊடாக மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது தீர்க்கமாக பேசப்பட்டது.

காலநிலை அனர்த்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, உகண்டாவிற்கான இலங்கை தூதுவர் வீ.கனநாதன் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் இதன்போது கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...