கரையோர ரயில் பாதையில் தண்டவாளம் வெடித்ததால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று (22) காலை பாணந்துறை மற்றும் எகொட உயன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் தண்டவாளம் வெடித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து காலி வரை செல்லும் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.