follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1யுக்தியவுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இலட்சக்கணக்கில் பரிசுத்தொகை

யுக்தியவுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இலட்சக்கணக்கில் பரிசுத்தொகை

Published on

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்ற தகவல் அளிப்பவர்களுக்கு பண வெகுமதிகளை வழங்க காவல்துறை தீர்மானித்துள்ளது.

இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அவ்வாறான தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பண வெகுமதிகள் வழங்கப்படும்.

தானியங்கி துப்பாக்கிகள் (T56, AK47, M16, SAR80, T81 மற்றும் ஏனையவை) – சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000 வழங்கப்படும்.

அரை தானியங்கி துப்பாக்கிகள் (கைத்துப்பாக்கி 84S, SLR, Auto Loading Shot Guns மற்றும் ஏனைய அரை தானியங்கி துப்பாக்கிகள்) சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000 வழங்கப்படும்.

ரிவால்வர் ஆயுதங்கள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.150,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.100,000 வழங்கப்படும்.

ரிபீடர் துப்பாக்கிகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.50,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

வெளிநாட்டு துப்பாக்கிகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.25,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000 வழங்கப்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...