follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன

நாடாளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன

Published on

பாராளுமன்றில் மின்சாரக் கட்டணம் பற்றாக்குறையில்லாமல் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினாலோ அல்லது ஜனாதிபதி செயலகத்தினாலோ மின்சார கட்டணம் செலுத்துவதில் தற்போது நிலுவை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிவித்து பாராளுமன்றத்தை அவமதித்த ரஞ்சன் ஜெயலாலை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

7 கோடி ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாமல் பாராளுமன்றம் செயலிழந்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அதில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...