follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொவிட் தொற்று மேலும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளமையினால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவிற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமது அரசாங்கத்துடன் இணைந்து, வைரஸ் பரவலை தடுப்பதே எதிர்கட்சியின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மக்கள் இவ்வாறு ஒன்று திரளும் பட்சத்தில், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு, புதிய வைரஸ் அலைகள் ஏற்படும் என சுகாதார பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது நினைவூட்டினார்.

சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடுவதை நீதிமன்ற உத்தரவை பெற்று தாம் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...