follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1பட்டினியில் கிடக்கும் நாட்டில் பொங்கல் கொண்டாட, இந்திய நடிகைகளை அழைத்து வர ஜீவனுக்கு எங்கிருந்து...

பட்டினியில் கிடக்கும் நாட்டில் பொங்கல் கொண்டாட, இந்திய நடிகைகளை அழைத்து வர ஜீவனுக்கு எங்கிருந்து பணம்?

Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஹட்டனில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவிற்கு பிரபல தென்னிந்திய நடிகைகளை அழைத்தமை தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தென்னிந்திய நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சங்கீதா மேனன் மற்றும் மீனாட்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருவதற்கு வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்பட்டதா என அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அரசியல் எதிரிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் லெட்சுமணர் சஞ்சய், “வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் போது, ​ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய தைப் பொங்கலைக் கொண்டாடினார் என்று ஜீவன் தொண்டமானிடம் வினவினார்”

“நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகுகள் அதிகரித்துள்ளன. பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. மக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கி அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களின் சேவைகளை பெற்றுக் கொண்டனர். ஆனால் ஜீவன் தொண்டமான் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார். இந்தப் பயணத்துக்கான பணம் எங்கிருந்து கிடைத்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீணடித்ததற்கு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் ஜீவன் தொண்டமான் பதில் சொல்ல வேண்டும்” என லெட்சுமணர் சஞ்சய் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்விற்கு தென்னிந்திய நடிகைகளுக்கு பதிலாக உள்ளூர் கலைஞர்களை அழைக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...