“உண்மையில், அமைச்சரின் மறைவால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” – மஹிந்த இரங்கல்

1047

இன்று (25) காலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“உண்மையில், எங்கள் அன்பான அமைச்சரின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். குறிப்பாக கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலும் மாகாணசபை விவகாரங்களிலும் முன் வந்து செயற்பட்ட அமைச்சர்.

எனவே அந்த அமைச்சரின் மரணம் நாட்டுக்கும், தேசத்துக்கும், கட்சிக்கும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. கட்சியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

வெளி மாகாணங்களிலும் இலங்கை முழுவதிலும் பணியாற்றினார். அவர் ஒரு பக்கம் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு கட்சி தனது தலைமைத்துவத்தை இழக்கும் போது அது அந்த மாகாணத்தையும் பாதிக்கும்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here