இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள பதவிக்கு விருப்புப் பட்டியலில் அடுத்துள்ள எல்.கே.ஜகத் பிரியங்கரவை நாடாளுமன்றம் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகத் பிரியங்கர கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு ஆறாவது இடத்தில் இருந்தார்.
அந்தக் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. அவர் பெற்ற விருப்பு வாக்குகள் 40527 ஆகும். இதன்படி, சனத் நிஷாந்தவினால் காலியான சபை உறுப்பினர் பதவிக்கு அவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஜகத் பிரியங்கர 2020 பொதுத் தேர்தலில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து போட்டியிட்டார்.