கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளன.
புத்தளம் ராஜகடலுவ கத்தோலிக்க கல்லறையில் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது.
இறுதி அஞ்சலிக்காக புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறக்கும் போது 48 வயதான சனத் நிஷாந்த பெரேரா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.