“அநுர அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்பது 100% உறுதி”

1871

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதில் 100 வீதம் உறுதியாக உள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எவராலும் ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர திஸாநாயக்க என்று ஏற்கனவே ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும், வேறு சிலர் கதைத்தாலும் அவை செல்லுபடியாகாது என்றும் அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுர திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தாலும் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here