துஷ்பிரயோகம் தொடர்பில் உடன் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்

299

நீதி நடவடிக்கைக்கு சமாந்தரமாக இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

109க்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்யுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முறைப்பாட்டுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நீதி வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை பொலிஸ் களத்தை மையப்படுத்தி நடைபெற்றது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இது இடம்பெற்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here