follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1துஷ்பிரயோகம் தொடர்பில் உடன் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்

துஷ்பிரயோகம் தொடர்பில் உடன் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்

Published on

நீதி நடவடிக்கைக்கு சமாந்தரமாக இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

109க்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்யுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முறைப்பாட்டுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நீதி வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை பொலிஸ் களத்தை மையப்படுத்தி நடைபெற்றது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இது இடம்பெற்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...