follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும் நீதி நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்

சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும் நீதி நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்

Published on

சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும் நீதி நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரிவு சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையும் இந்தப் பணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சர் பதவியில் இருக்கும் வரை சர்வதேச சமூகத்திற்குத் தேவையான வகையில் செயற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களை பலப்படுத்துவதே தாம் முதலில் செய்ய வேண்டியிருந்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ சீருடையை அணிந்து கொண்டு யாராவது ஒருவரை தாக்க வந்தால் பதிலுக்கு தாக்க வேண்டும் அல்லது அதற்குரிய சீருடையினால் எந்த பயனும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்ததாகவும், ஜனாதிபதி தமக்கு வழங்கிய பலத்தினால் தான் அந்த முடிவுகளை எடுக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...