follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1எதிர்வரும் தேர்தல் வெற்றி சிபான்மை கட்சிகளின் கையில்?

எதிர்வரும் தேர்தல் வெற்றி சிபான்மை கட்சிகளின் கையில்?

Published on

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கும் விதத்தை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இந்த சில விடயங்களை பொறுத்தே அமையும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமைகள் வடக்கு கிழக்கிலும், தோட்டங்களிலும் உள்ள அரசியல் தலைமைகளுடன் நிறைய மாறலாம்.

இங்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் சமமாக இருக்கும்.

அண்மையில் முடிவடைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் ஸ்ரீதரனின் வெற்றி குறித்து இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரே தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகவும் இருப்பார் என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருவதே இதற்குக் காரணம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...