follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுகரட்டைத் தொடர்ந்து தக்காளி எகிறியது

கரட்டைத் தொடர்ந்து தக்காளி எகிறியது

Published on

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருகின்றன.

இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய நாட்களில் ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாவாகும்.

வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...